Friday, May 6, 2011

குழந்தையின் வேலி உலகு.........? ஈழம்.

அம்மா..., அவங்கென்ன வேலிக்குள்ள
இருக்காங்க?
அவங்களெல்லாம் பாவம் செஞ்சவங்க.
அப்பா, நம்மதான் பாவம்
செஞ்சவங்கனுச்சு?
ஆமா, போன சென்மத்துல
செஞ்சிருப்போம்.
அவங்களெல்லாம் வெளியில வரச்
சொல்லும்மா?
இங்கிருக்கறவங்களே, அவங்களால்தான் வெளிய
போமுடியும்.
அம்மா.., என்ன, அப்பதேயிருந்து
உலறிக்கிட்டிருக்க?
ஈழத்துச் சனங்கள் எல்லோரும்
உலரிட்டுத்தானிருக்கோம்.
அம்மா.., ஒழுங்கா பதிலே
சொல்லமாட்டிக்கிற?
ஊமை நிலையிலடா, நாம்
இருக்கோம்.............

No comments:

Post a Comment