Sunday, May 8, 2011

அன்னையர் தினத்தன்னை 'மட்டும்' கொண்டாடாதே!

                                                                                                                                                                 படம்: கா.கே
 
ஆண்டொருமுறை மட்டும் அவளைக்
கொண்டாடாதே..
ஒவ்வொரடி-நீ எடுத்து வைக்கையில்
கொண்டாடியவளவள்
மழலையுன் பேச்சில் மலைத்து
நின்றவளவள்

உயிரெழுத்து-நீ பயில மெய் வருந்தி
உழைத்தவளவள்
உனதுச்சி-குளிர உக்கிர வெயிலில் உனக்கு
குடையானவளவள்
உனது மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி
மறந்தவளவள்

ன்னையவளை உன் ஆயிள் முழுவதும்
கொண்டாடு
ம்மா... என-நீ அழைத்த நொடியிலிருந்து
உனக்காகவே வாழ்கிறாள்
மாதவம்-செய்து கருவறையில் காத்தவளை
காப்பதே உன் கடமை!

1 comment:

Unknown said...

அன்னையாய் வாழ எனக்கு ஆசைதான்
ஆனால் பெண்மை இருந்தால்தான் அன்னையாய்
மாற முடியுமாம் நானும் ஆனேன் அன்னையாய்
-ஒரு திருநங்கையின் குரல்

ராம் - ஆராரிராரோ பாடல் வரிகளுக்கு
http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_08.html

Post a Comment