Saturday, November 12, 2011

கண்மொழி!


நம் கண்கள் இமைச் சிறைகளுக்குள்
அடைபட விரும்பவில்லை
அனைவரும் தூங்கியபின் நம் கண்கள் மட்டும்
இரகசியங்களைப் பரிமாறுகிறது வெகு நேரமாக
இரகசியங்கள் வெளிப்படுமோயென சிறைவாசம்
செல்ல எத்தனிக்கிறது என் கண்கள்
அட பைத்தியமே, நம் கண்கள் பேசும்
மொழியை நம்மையன்றி யாரறிவார் என
செல்லச் சிணுங்கல் போடுகிறது அவள் கண்.

1 comment:

Tamilthotil said...

அட பைத்தியமே, நம் கண்கள் பேசும்
மொழியை நம்மையன்றி யாரறிவார்

அழகான வரிகள்

Post a Comment