Saturday, February 23, 2013

அவளை தொந்தரவு செய்யாதீர்கள்!



எதையோ இழந்தது போன்ற தேடல்
எதையும் இழக்கவில்லை

காலங்கள் தெரியவில்லை
தூங்கும் நேரத்தில் விழித்திருக்கிறேன்
பகல் முழுவதும் தூங்குகிறேன்
வேலை ஒன்றுமே செய்யவில்லை
தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக ஒரு மன நிலை
செய்யாத ஒரு வேலையில் குறுக்கிடுபவர்கள் மேல் எரிச்சல்

சற்று தள்ளியிருப்பது அவன் உடல் மட்டுமே
இல்லாத பிரிவை மனம் மட்டுமே வளர்த்தெடுக்கிறது
மனதை கற்பனை செய்ய விடுவது ஆபத்து
கவிதைகளுக்கு மட்டும் விதிவிலக்கு

பெண்ணுரிமையில் நாட்டம் கொண்டவன் அவன்
நான் என்ற அகங்காரம் கொண்ட போது சிறு புன்னகை பரிசளித்தான்
இன்று அவனுக்கு கோபத்தை பரிசளிக்க மனம் ஒப்பவில்லை
பாடம் கற்பித்தவனுக்கே பாடம் தேவையில்லை
சம உரிமையில் நாட்டம் கொண்டவள் நான்

எதையோ இழந்தது போன்ற தேடல்
அவனும் தேடுகிறான்
எதையும் இழக்கவில்லை
கூடிய விரைவில் பிரிவை இழப்போம்.

2 comments:

Kanmani Rajan said...

:) செய்யாத ஒரு வேலையில் குறுக்கிடுபவர்கள் மேல் எரிச்சல்!

நல்லா இருக்கு!

எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...

Nanri kanmani... :)

Post a Comment