Sunday, March 24, 2013

காதல் இல்லறம்


இமைக்காமல் உன்னைப் பார்த்திருப்பேன்
இமைத்து இமைத்து நீ சோர்ந்திருப்பாய்
இமைகள் மூடும் அந்த தருணம் உதடுகள் திறக்கும்
அது முத்தக் கவிதைகள் படைக்கும்

கவிதைக்கும், காமத்திற்கும் மயங்காத காதலர்கள் இல்லை
காமத்திற்கு மட்டுமே மயங்கினால் அது காதலே இல்லை
கவிதைக்கு உண்மை அழகு காமத்திற்கு கண்ணியம் அழகு
கவிதையான கண்ணியத்தில் தெரியும் வாழ்க்கையின் வழி

உனது வலியும் எனது வலியும் இணைந்து
பிறக்கும் கடைசி வலிதான் காதலின் ஒலி
எனக்கும் பிடித்த உனக்கும் பிடித்த
அந்த வலி தான் நம் உயிரின் ஒளி !


No comments:

Post a Comment