Saturday, April 30, 2011
Saturday, April 23, 2011
இதற்கு முடிவேயில்லையா.....?
பதவியில் அமரும் முன்.....
உங்களை நம்பித்தான் இருக்கிறேனேன
ஒரு விரல் காட்டுவான்
வெற்றி நமக்குத்தான் என
இரு விரல்கள் காட்டுவான்
முப்போகம் எங்களாட்சியில்தான் விளையுமென
மூன்று விரல்கள் காட்டுவான்
திசையெங்கும் எங்களால்தான் நல்லாட்சியமையுமென
நான்கு விரல்கள் காட்டுவான்
நன்கு உங்களை எங்களால்தான் கவனிக்கமுடியுமென
ஐந்து விரல்கள் காட்டுவான்.
பதவியில் அமர்ந்த பின்.....
உங்களை கொல்லத்தான் போகிறேனேன
ஒரு விரல் காட்டுவான்
வெற்றி எனக்கு மட்டும்தான் என
இரு விரல்கள் காட்டுவான்
மூன்று கோடுகள் உங்கள் நெற்றிக்குத்தான் பொருத்தமென
மூன்று விரல்கள் காட்டுவான்
திசையெங்கும் எங்களால்தான் ஊழல் பரவுமென
நான்கு விரல்கள் காட்டுவான்
எங்களை நீங்கள்தான் கவனிக்கவேண்டுமென
ஐந்து விரல்கள் நீட்டுவான்.
நம்மில் ஒருவர்தான், அவர்களுமென
மறந்துவிட்டார்கள் பாழாய்ப்போன
இந்த தவறான அரசியல்வாதிகள்.
பதவியில் அமரும் முன்.....
மக்களுக்கும் மறதி அதிகம்.
Labels:
அரசியல்வாதி,
பதவி
போராட்டம்!
கம்யூனிச நிறத்தைக் கொண்டதால்
என்னவோ?
தெருக்களில் போராடிக் கொண்டிருக்கிறது
தாபால்பெட்டி!
இத்தகவல் தொழில்நுட்ப யுகத்தில்!
Labels:
post box+e-mail inbox=war
Subscribe to:
Posts (Atom)