Sunday, March 24, 2013

அவளுக்காக அலையும் காதல்!


விலகி ஓடினாய்
குறும்பு செய்தேன்
பாதம் தொட்டேன்
பாசம் காட்டினாய்
அள்ளி அணைத்தேன்
ஆடைகளுக்குள் புகுந்தேன்
உன்னை ஒப்படைத்தாய்
விளையாடினோம்
உறவாடினோம்
விட்டுச் செல்லாதே..
உன்னைக் கண்ட பின் கடலாய் வாழ ஆசையில்லை !
உனது கைக்குட்டை ஆக்கிக்கொள் !!
உனக்கு மட்டும் சொந்தமாக விரும்புகின்றேன் !!!


காதல் இல்லறம்


இமைக்காமல் உன்னைப் பார்த்திருப்பேன்
இமைத்து இமைத்து நீ சோர்ந்திருப்பாய்
இமைகள் மூடும் அந்த தருணம் உதடுகள் திறக்கும்
அது முத்தக் கவிதைகள் படைக்கும்

கவிதைக்கும், காமத்திற்கும் மயங்காத காதலர்கள் இல்லை
காமத்திற்கு மட்டுமே மயங்கினால் அது காதலே இல்லை
கவிதைக்கு உண்மை அழகு காமத்திற்கு கண்ணியம் அழகு
கவிதையான கண்ணியத்தில் தெரியும் வாழ்க்கையின் வழி

உனது வலியும் எனது வலியும் இணைந்து
பிறக்கும் கடைசி வலிதான் காதலின் ஒலி
எனக்கும் பிடித்த உனக்கும் பிடித்த
அந்த வலி தான் நம் உயிரின் ஒளி !


Thursday, March 7, 2013

ஒரு நாள் கூத்து !!



சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விடுகிறோம்.
இனிப்புகள் பரிமாறுகிறோம்.
ஒரு நாள் கூத்து நிறைவடைகிறது.

மகளிர் தினமும் கூட கொண்டாடுகிறோம்!

புறாக்களை பறக்க விட மனமில்லையென்றாலும்
சிறகுகளையாவது ஒடிக்காமல் இருப்போம்.
இனிக்கச் செய்யாவிட்டாலும் கசப்பான அனுபவங்களை
ஏற்படுத்தாமல் இருப்போம்.
ஒரு நாள் கூத்தாக நிறைவடையாமல் சிறகடிக்கும்
சுதந்திரத்தை பகிர்ந்து வாழ்வோம் !!